Suganthini Ratnam / 2015 ஜனவரி 25 , மு.ப. 09:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு மாவட்டத்தில் திங்கட்கிழமையிலிருந்து (26) அரசாங்க உத்தரவாத விலையில் நெல் கொள்வனவு செய்யப்படும் என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்சார்ள்ஸ் என தெரிவித்தார்.
இந்த நெல் கொள்வனவு அரசாங்க அதிபரின் நிதியுதவியில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள், கமநல அபிவிருத்தி ஆணையாளர் ஊடாக கொள்வனவு செய்யப்படவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல் அறுவடை முன்னெடுக்கப்படுகின்றது. இந்த நிலையில், மிகக் குறைந்த விலைகளில் தனியார் வர்த்தகர்களினால் நெல் கொள்வனவு செய்யப்பட்டு வருவதனால், விவசாயிகள் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கின்றனர்.
கடந்த மாதத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் வேளாண்மை பாதிக்கப்பட்டு மிகவும் குறைந்தளவான அறுவடையை பெற்றுள்ள விவசாயிகள், தமது நெல்லுக்கு சரியான விலை கிடைக்காமையினால் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
இவ்வாறான விடயங்கள் குறித்து விவசாயிகளின் புகாரை அடுத்து, இந்த விலைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
5 hours ago
5 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
9 hours ago