Suganthini Ratnam / 2015 ஜனவரி 27 , மு.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மக்களின் வரிப்பணத்திலிருந்தே மக்களுக்கான உதவிகள் வழங்கப்படுகின்றன என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.
காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு வாழ்வாதார தொழில் உபகரணங்கள் வழங்கும் நடவடிக்கை செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்றது. இங்கு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக்கின் நிதியொதுக்கீட்டில் 20 குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்கள், இடியப்பம் தயாரிக்கும் உபகரணங்கள், பாய் பின்னும் கருவிகள், சிற்றுண்டிகள் தயாரிக்கும் உபகரணங்களும் வழங்கப்பட்டன.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'நேர்மையான அரசியல் மூலம் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மக்களின் வாழ்வாதார மேம்பாட்டை கட்டியெழுப்பும் வகையில் இவ்வாறான உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்த உதவிகள் மக்களின் வரிப்பணத்திலிருந்து வழங்கப்படுகின்றன. இந்தப் பொருட்களை வழங்குவதற்காக நீங்கள் யாரும் வாக்களிக்கக்கூடாது.
ஊழல் மோசடிகள் அற்ற நல்லாட்சிக்கும் நேர்மையான உண்மையான அரசியல் பணிகளுக்கும் உங்களுடைய வாக்குகள் சாட்சியாக அமையவேண்டும். எமது ஊரில் கடந்தகால வன்முறை அரசியலுக்கும் ஊழல் நிர்வாகத்துக்கும் முடிவு கட்டும் அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்தவேண்டும்' என்றார்.
5 hours ago
5 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
9 hours ago