2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சடலம் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டது

Sudharshini   / 2015 பெப்ரவரி 01 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு கடல் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட சடலம், உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளதென காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.


புதுக்குடியிருப்பு கடற்கரை பகுதியில் நேற்று சனிக்கிழமை மீட்கப்பட்ட சடலம் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழடித்தீவை சேர்ந்த தர்மலிங்கம் வசந்தகுமார் (30) என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


 ஷமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலம், பிரேத பரிசோதனையின் பின்னர் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதென   பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


இச்சம்பவம்  தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X