2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கஞ்சாவுடன் மூவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஜூலை 21 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று பேர்  மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் திங்கட்கிழமை (20) இரவு கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாமரைக்கேணியிலுள்ள தேவாலயமொன்றுக்கு அருகில் ஐந்து கிராம் கஞ்சாவுடன் 22 வயதுடைய ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

இவ்வாறிருக்க, 12 கிராம் கஞ்சாவுடன் 35 வயதுடைய ஒருவரும் கஞ்சா சுருட்டை புகைத்துக்கொண்டிருந்த 45 வயதுடைய ஒருவருமாக அம்பாறை, கல்முனைப் பொலிஸ் பிரிவில் இருவர் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .