2025 மே 14, புதன்கிழமை

இரண்டு வேட்பாளர்களினுடைய வீடுகளின் மீது தாக்குதல்

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 12 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-.வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிடும் இரண்டு  வேட்பாளர்களினுடைய வீடுகளின் மீது செவ்வாய்க்கிழமை (11)  இரவு இனந்தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் தம்மிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

கொக்கட்டிச்சோலை பகுதியில் அமைந்துள்ள  வேட்பாளர்களின் வீடுகளின் மீதே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .