2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கஞ்சாவுடன் குடும்பஸ்தர் கைது

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 13 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிச் நகர் கிராமத்திலுள்ள வீடொன்றில் கஞ்சா வைத்திருந்தார் என்ற  குற்றச்சாட்டின் பேரில் நேற்று வியாழக்கிழமை காலை 35 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சந்தேக நபர் கஞ்சா விற்பனை செய்வதாக பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சந்தேக நபரை கைதுசெய்ததுடன், அவரிடமிருந்து 6,130 மில்லிகிராம் கஞ்சாவை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X