2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

52 வருடங்களின் பின் மட்டு. விமான நிலையத்திற்கான அபிவிருத்திப் பணிகள்

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 02 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)

மட்டக்களப்பு விமான நிலையத்திற்கான பாரிய அபிவிருத்தி பணிகள் நாளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இதற்கென 100 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதாகதாகவும் அவர் கூறினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மட்டக்களப்பு விமான நிலையத்தின் விமான ஓடுபாதைக்கான அடிக்கல்லை நாட்டிவைப்பார் எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

1956ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு விமான நிலையம் 52  வருடங்களின் பின்னர்  முதல் தடவையாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .