2025 மே 02, வெள்ளிக்கிழமை

863,000 ரூபாய் பெறுமதியான செவிபுல, கற்புல உபகரணங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2014 பெப்ரவரி 14 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்


யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வவுணதீவுப் பிரதேசத்தில் கண்பார்வை குறைந்த மற்றும் செவிப்புலனற்ற மாணவர்கள் 9 பேருக்கு சுமார் 863,000 ரூபாய் பெறுமதியான செவிபுல, கற்புல உபகரணங்கள் புதன்கிழமை (12) சிறுவர் பாதுகாப்பு நிறுவனத்தின் அனுசரணையுடன் வை.எம்.சீ.ஏ நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ளன.

மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் வெ.தவராஜா தலைமையில் இடம்பெற்ற இந நிகழ்வில் 5 மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகளும் 4 மாணவர்களுக்கு செவிப்புல சாதனங்களும் வழங்கப்பட்டுள்ளன. 

இதில், செவிப்புலனற்ற 04 மாணவர்களுக்கு 816,000 ரூபா பெறுமதியான 8 செவிப்புல சாதனங்களும்  கண் பார்வை குறைந்த 05 மாணவர்களுக்கு 47,000ரூபா பெறுமதியான 5 மூக்குக் கண்ணாடிகளும் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் சிறுவர் நன்னடத்தை உத்தியோகஸ்தர் எம்.வரதராஜன், சிறுவர் மேம்பாட்டு உத்தியோகஸ்தர் ரி.பிரபாகரன், சிறுவர் பாதுகாப்பு நிறுவன பிராந்திய முகாமையாளர் மாக் பற்ரசன், வை.எம்.சீ.ஏ.நிறுவனத்தின் வெளிக்கள உத்தியோகஸ்தர்களான திருமதி நா.கிரிசாந்தினி, திருமதி எஸ்.அனிற்ரா ஆகியோர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X