Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 19, வியாழக்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 ஓகஸ்ட் 26 , பி.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாகாணசபைத் தேர்தல் முறையை மாற்றுவதற்கு வாக்களித்தவர்களே, அநியாயம் நடத்துவிட்டதெனக் கூறி தற்போது ஒப்பாரி வைக்கின்றனர் என்று கூறிய நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதித் தவிசாளர் அப்துர் ரஹ்மான், காவலுக்கு நிறுத்தப்பட்டவர்களே, களவுக்கு ஒத்துழைத்துவிட்டு, இப்போது “திருட்டுப் போய்விட்டது" என்று கூறுவது, வேடிக்கையாகவுள்ளது என்றும் கூறினார்.
மாகாணசபைத் தேர்தலுக்கான புதிய தேர்தல் முறை தொடர்பில், இன்று (26) கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக தொடர்ந்தும் கருத்து தெரித்த அவர், தேர்தல் முறை காரணமாக, ஏற்படப்போகும் அபாயம் பற்றி, ஏற்கெனவே பரவலாகப் பேசப்பட்டபோதும், எல்லை நிர்ணய அறிக்கை வெளிவந்த பின்னரே, இதன் பாரதூரத்தை, அனைவரும் புரிந்துகொண்டனர் என்றும், பாதகமாக அம்சங்கள் நிவர்த்திக்கப்பட்ட பின்னர், இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவேண்டும் என்று முஸ்லிம் சமூகத்தினர் அழுத்தமான கோரிக்கை முன்வைத்தபோதிலும், முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள், இதற்கான காத்திரமான முயற்சிகளை எடுக்காதமையால், இந்த விவகாரம், தற்போது இறுதிக் கட்டத்துக்கு வந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
முஸ்லிம் சமூகத்துக்குப் பாதகமான தேர்தல் முறை வருவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்று கூறிய, முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளின் பேச்சு, தற்போது முடங்கிப் போய்விட்டது என்று குறிப்பிட்ட அவர், ஜனாதிபதியின் கட்சியைச் சேர்ந்த இவர்கள், தொடர்ந்தும் மௌனம் காத்து, "தமது எஜமான விசுவாசத்தை வழமைபோல் காட்டி வருகின்றனர்" என்றும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
59 minute ago
2 hours ago
3 hours ago