2025 மே 10, சனிக்கிழமை

அம்பியூலன்ஸ் கையளிப்பு

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2019 ஓகஸ்ட் 12 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதார அமைச்சால், காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட அம்பியூலன்ஸை, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், காத்தான்குடி ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் வைத்தியர் எம்.எஸ்.எம்.ஜாபிரிடம் ஜாபிரிடம் நேற்று (11) கையளித்தார்.

இந்த அம்பியூலன்ஸை, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் ஆகியோர், சுகாதார அமைச்சின் கேட்போர்கூடத்தில் வைத்து, கடந்த புதன்கிழமையன்று, ஷிப்லி பாறூக்கிடம் கையளித்திருந்தனர்.

19 மில்லியன் ரூபாய் பெறுமதியான இந்த அம்பியூலன்ஸ் கையளிப்பு நிகழ்வில், காத்தான்குடி ஆதார வைத்தியசாலை வைத்தியர்களும் ஊழியர்களும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X