2025 மே 06, செவ்வாய்க்கிழமை

ஏத்துக்கால் கடற்கரையில் மண்மூடைகள்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 02 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி, ஏத்துக்கால் கடற்கரையில் ஏற்பட்டுள்ள கடலரிப்பை தடுக்கும் வகையில்  அங்கு  மண்மூடைகள் போடப்படுகின்றன.

கரையோரம் பேணல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட திட்ட இணைப்பாளர் ஏ.கோகுலதீபன், காத்தான்குடி பதில் பிரதேச செயலாளர் எம்.எஸ்.ஹனிபா, உதவி பிரதேச செயலாளர் ஏ.எசி.அகமட் அப்கர், கரையோரம் பேணல் திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளிட்டோர் நேற்று வியாழக்கிழமை மாலை ஏத்துக்கால் கடற்கரையை  பார்வையிட்டனர்.

இதன்போது, கடலரிப்பை தடுப்பதற்காக மண்மூடைகளை  போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதனையடுத்து ஏத்துக்கால் கடற்கரையில் மண்மூடைகள் போடப்படுகின்றன.

ஏத்துக்கால் கடற்கரையில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டுள்ள கடலரிப்பினால் சுமார் 25 அடிப்பிரதேசம் கடலுக்குள் சென்றுள்ளதாக கரையோரம் பேணல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட திட்ட இணைப்பாளர் ஏ.கோகுலதீபன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X