2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஓட்டோவில் ஆடுகள் கடத்தல்; நால்வர் சிக்கினர்

Editorial   / 2022 ஜனவரி 06 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலை நகர் பகுதியில் நேற்று (05) ஓட்டோவில் வந்த நால்வர், அங்கு மேய்ந்து திரிந்த இரண்டு ஆடுகளை திருடிச் சென்றுள்ளனர்.

அந்நபர்களை,சி.சி.டி.வி கமெராவின் உதவியுடன் அடையாளம் கண்டு கொண்ட பிரதேச மக்கள், அவர்களை பிடித்து வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த பகுதியில் தொடர்ச்சியாக ஆடுகள் திருடப்பட்டு வருவதாக ஆடுகளின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .