2025 மே 07, புதன்கிழமை

கடல் அரிப்பினால் அத்திபாரம் சேதம்

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 30 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி, ஏத்துக்கால் கடற்கரையில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்புக் காரணமாக மலசலகூடம் அமைப்பதற்காக இடப்பட்டிருந்த அத்திபாரம்  புதன்கிழமை காலை உடைந்துள்ளது.

மீனவர் தங்குமிடக் கட்டடத்துடன் மலசலகூடம் அமைப்பதற்காக இடப்பட்டிருந்த அத்திபாரமே இவ்வாறு உடைந்துள்ளது.
இக்கடற்கரையில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்புக் காரணமாக சுமார்; 25 அடி தூரம் கடலுக்குள் சென்றுள்ளதாக காத்தான்குடி உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர் தெரிவித்தார்.

கடல் அரிப்பினால் சேதமடைந்துள்ள கட்டடத்தை சென்று பார்வையிட்ட காத்தான்குடி உதவிப் பிரதேச செயலாளர்,  இது தொடர்பில் கரையோரம் பேணல் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X