Princiya Dixci / 2022 மே 18 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான்
ஓய்வு பெற்ற அதிபரும், பிரபல எழுத்தாளரும், அஹதியா இயக்கத்தின் ஆயுட்கால செயற்பாட்டாளருமான கலாபூசணம் அல்ஹாஜ் எம்.ஏ.செய்யிது முஹம்மது, இன்று (18) அதிகாலை காலமானார்கள்.
இவர், ஸலவாத்து மாலை நூலாசிரியரும், கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் பாடசாலை ஸ்தாபகரும், பல விருதுகளை வென்ற இலக்கியவாதியும் ஆவர்.
அத்தோடு, சிரேஷ்ட ஊடகவியலாளரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தேசிய அமைப்பாளருமான மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபாவின் தந்தையுமாவார்.
அன்னாரது ஜனாசா நல்லடக்கம், காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய ஜும்ஆ பள்ளிவாயல் மையவாடியில் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.
31 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
40 minute ago