Kogilavani / 2016 ஜனவரி 22 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்
'கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு மக்கள் ஒற்றுமையாக நின்று வாக்களித்ததால்தான்; முன்னாள் ஜனாதிபதி தோற்கடிக்கப்பட்டு ஜனாதிபதி மையித்திரிபால சிறிசேன தெரிவுசெய்யப்பட்டார். இந்த வெற்றிக்கு வடக்கு கிழக்கு மக்களின் பங்கே அதிகம்'; என முன்னாள் பிரதி அமைச்சர் சோ.கணேசமூர்த்தி தெரிவித்தார்.
துறைநீலவணை மக்களை வியாழக்கிழமை சந்தித்தபோதே அவர் இதனை கூறினார்.
இங்கு தொடரந்;தும் உரையாற்றிய அவர்,
'சகல அரசியல் கட்சிகளும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதிக்கு வாக்களிப்பதற்கு முன்னர் நிபந்தனையுடன் தங்களின் ஆதரவைத் தெரிவித்திருந்தனர். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக தலைவர் சம்மந்தன் தெரிவித்திருந்தார.; இன்று வடக்கில் தமிழ் மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படாமல் உள்ளது.
பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு மக்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும். அதாவது என்னோடு தோளோடு தோள்நின்று உழகை;கவேண்டும். துறைநீலாவணைக் கிராமத்துக்கு உரிய நேரத்தில் தண்ணீர் கிடைப்பதில்லை என பலர் என்னிடம் தெரிவிக்கின்றனர்.
இக்கிராமத்துக்கு 24 மணித்தியாலமும் நீரை பெற்றுகொடுப்பதற்கான வசதிகளை வெகுவிரைவில் ஏற்படுத்தி தருவேன்' என்றார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago