2025 மே 07, புதன்கிழமை

நினைவு தினம் அனுஷ்டிப்பு

Niroshini   / 2015 செப்டெம்பர் 22 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா,வடிவேல் சக்திவேல்  

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு படுகொலையின் 25 ஆவது ஆண்டு  நினைவு தினம் நேற்று திங்கட்கிழமை மாலை நினைவுத் தூபியின் அருகில் அனுஷ்டிக்கப்பட்டது.

புதுக்குடியிருப்பு புதுவை அமைப்பின் தலைவர் எஸ். சதாசிவம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான கே.துரைராசசிங்கம், கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா. கிருஸ்ணபிள்ளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், தமிழ் அரசுக் கட்சி கிளை உறுப்பினர்கள் உட்பட  பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது,புதுக்குடியிருப்பு ஆலயத்தில் விசேட வழிபாடுகளும் பின்னர்  இரத்ததான நிகழ்வும் நினைவேந்தலும் இடம் பெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X