2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பதவியேற்பு

Freelancer   / 2022 ஜூன் 02 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எர்.ஜவ்பர்கான் (மட்டக்களப்பு  நிருபர்)

கிழக்கு மாகாண புதிய சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபராக ராஜித சிறி தமிந்த நியமனம் பெற்றுள்ளார்.

இன்று (2) காலை மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பணிமனையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில்,  மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை கந்தளாய் பிராந்தியங்களுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் உட்பட மாகாண உயர்பொலிஸ் அதிகாரிகள் அடங்கலாக சர்வமத தலைவர்களும் கலந்துகொண்டனர்.

அதனைத்தொடர்ந்து, பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையையும் புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஏற்றுக்கொண்டார்.

மேலும், புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தென்மாகாணத்தில் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .