Princiya Dixci / 2022 மே 18 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு, காத்தான்குடி கடற்கரையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் பெண்களுக்கான கழிவறை தொகுதி, இனந்தெரியாதோரால் இன்று (18) அதிகாலை சேதப்படுத்தப்பட்டுள்ளது.
காத்தான்குடி நகர சபையினால் காத்தான்குடி கடற்கரை பகுதியில் பெண்களுக்கான இக்கழிவறை தொகுதி நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
காத்தான்குடி கடற்கரைக்கு வரும் பெண்களுக்கு கழிவறை வசதி இல்லாததால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.
இந்நிலையில், காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பரின் முயற்சியால் கழிவறை தொகுதி நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .