2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

மத்தியஸ்த்த சபை மீள ஆரம்பம்

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 10 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, மண்முனைப் பற்று பிரதேச மத்தியஸ்த்த சபையின் நடவடிக்கைகள், சுமார் ஒன்னரை மாதங்களுக்கு பின்னர் இன்று (10) மீள ஆரம்பிக்கப்பட்டன.

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக, நாடு தழுதவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தால் மத்திய சபை சபை நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டிருந்தன.

தற்போது மத்திய சபை ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கமைய, மண்முனைப் பற்று பிரதேச மத்தியஸ்த்த சபையின் நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அச்சபையின் தவிசாளர் வேலுப்பிள்ளை கந்தசாமி தெரிவித்தார்.

சுகாதார நடைமுறைகளை பேணி, மத்திய சபைக்கு வரும் பிணக்குகள் ஆற்றுப்படுத்தப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .