Princiya Dixci / 2022 ஓகஸ்ட் 04 , பி.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.எம்.பர்ஸான்
சுவர் விழுந்து மூன்றரை வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார் என வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்தானை அணைக்கட்டு பகுதியில் வைத்து நேற்று (03) இடம்பெற்றுள்ளது.
பழைய சுவர் ஒன்றுக்கு அருகில் சிறுமிகள் சிலர் விளையாடிக் கொண்டிருந்த போது, பலத்த காற்று வீசியதால் சுவர் விழுந்ததில் உசனார் பாத்திமா றீமா எனும் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிறுமியின் சடலம், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
6 minute ago
10 minute ago
15 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
10 minute ago
15 minute ago
20 minute ago