2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மைதானத்தில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்

Freelancer   / 2022 ஜூன் 04 , பி.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

கல்முனை பொது மைதானத்தில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் தற்போது  பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த  வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

இதில், அம்பாறை - கல்முனை, உடையார் வீதியை சேர்ந்த 58 வயதுடைய  ஒரு பிள்ளையின் தந்தையான காளிக்குட்டி கணேசன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர்  கடந்த  வியாழக்கிழமை(2) மாலை காணாமல் போயிருந்த நிலையில், பொது மைதானத்தில் சடலமாக காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு  தகவல் வழங்கியுள்ளர்.

சடலத்திற்கு அருகில் இருந்து அலறி விதைகள் மீட்கப்பட்டிருந்தன.

மேலதிக விசாரணைகளை கல்முனை  பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .