2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வவுணதீவு வயலில் ஆர்பிஜி லோஞ்சர் மீட்பு

Editorial   / 2021 ஒக்டோபர் 25 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள நெடுஞ்சேனை வயல் பிரதேசத்தில் கைவிடப்பட்டிருந்த ஆர்பிஜி லோஞ்சர் ஒன்றை, நேற்று (24) மாலை மீட்கப்பட்டுள்ளதாக, வவுணதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிசாந்த அப்புகாமி தெரிவித்தார்.

குறித்த வயலில் உழவு இயந்திரம் மூலம் உழவு நடவடிக்கையில் வயல் உரிமையாளர் ஈடுபட்டுள்ள நிலையில், நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்து  ஆர்பிஜி லோஞ்சா ஒன்று நிலத்தில் இருந்து வெளியே வந்துள்ளது.

இது தொடர்பாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, குறித்த ஆர்பிஜி லோஞ்சர் மீட்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதி கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியாக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .