2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

றம்புட்டான் பறித்தவர் மின்சாரம் தாக்கி பலி

Kogilavani   / 2016 ஜூன் 29 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரவிந்திர விராஜ் அபயசிறி

றம்புட்டான், பறிப்பதற்காக மரத்திலேறிய  கண்டி, வத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த சுதத் குமார என்ற 18 வயது இளைஞன், மின்சாரம் தாக்கி பரிதாகரமாக உயிரிழந்த சம்பவம் மாத்தளை, உடதென்ன பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை(28) மாலை இடம்பெற்றுள்ளது.

மேற்படி இளைஞன் மாத்தளை, உடதென்ன பிரதேசத்திலுள்ள உறவினரின் வீடொன்றுக்கு சென்றிருந்த போது, றம்புட்டான் பழங்களை பறிப்பதற்காக மரத்திலேறியுள்ளார்.

இவர், மரத்திலேறி பலகையொன்றினால் றம்புட்டான் பழங்களை பறித்துகொண்டிருந்த போது, அப்பலகை நழுவி, அருகிலிருந்து அதிசக்திவாய்ந்த மின்கம்பியில் பட்டதினால் அவர், மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகி பலியாகியுள்ளார் என ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .