2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

உனம்புவ பகுதியில் மண்சரிவு; போக்குவரத்து பாதிப்பு

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 26 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.எம். ரம்ஸீன்)

கம்பளையில் பெய்த கடும் மழையால் உனம்புவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவின்போது பாறாங்கல்லொன்று உருண்டு வந்து பாதையில் விழுந்ததில் அப்பகுதியூடான போக்குவரத்தில் பாதிப்பேற்பட்டுள்ளது.

மண்சரிவால் சக்கரங்கொடுவ, உனம்புவ, அம்புளுவாவ, கம்பளைவெல , கண்டி வீதி ஆகிய பகுதிகளிலுள்ள 150 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன், கண்டி வீதியில் பெற்றோல் நிரப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள குடிசை வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

இக்குடும்பங்களை கம்பளை – உடபலாத்த பிரதேச செயலாளர் நிமல் பாலசூரிய மற்றும் அனர்த்த நிவாரண அதிகாரிகள்  சென்று பார்வையிட்டனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .