2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

குறைந்த விடுமுறை பெற்ற ஆசிரியர்களை கௌரவிக்கும் விழா

Super User   / 2010 நவம்பர் 29 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.எம். ரம்ஸீன்)

கம்பளை வலய தமிழ் மொழி மூல பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களில் 2009ஆம் ஆண்டு குறைந்த விடுமுறை பெற்ற ஆசிரியர்களை கௌரவிக்கும் விழா இன்று திங்கட்கிழமை கம்பளை இந்து கல்லூரியில் நடைபெற்றது.

கோட்ட கல்வி பணிப்பாளர் எஸ்.துரைராஜ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கம்பளை வலயத்தை சேர்ந்த 25 ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் மத்திய மாகாண மேலதி கல்வி பணிப்பாள பி. சதீஸ், மாகாண தமிழ் கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் அருந்ததி சத்யேந்திரா, கம்பளை வலய கல்வி பணிப்பாளர் திருமதி டபிள்யு.எம்.சி.வீரகோன், கம்பளை வலய மேலதிக பிரதி கல்விப் பணிப்பாளர் திருமதி எம். லோகநாதன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .