2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

சிறைக்காவலர்களுக்கு தெரியாமல் கைதி தப்பியோட்டம்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 01 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எப்.எம்.தாஹிர்)

பண்டாரவளை நீதிமன்றத்திற்கு வழக்கொன்றின் தீர்ப்பிற்காக அழைத்துவரப்பட்ட கைதியொருவர் தீர்ப்பு வழங்கப்படவிருந்தவேளையில், சிறைக்காவலர்களுக்கு தெரியாமல்; தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.

இவ்வாறு தப்பிச் சென்ற நபர் பண்டாரவளை பிரதேசத்தை  சேர்ந்த பி.செனரத் (வயது 47) என தெரியவருகிறது. குறித்த நபர் விவாகரத்து வழக்கொன்றின் பராமரிப்பு செலவினத்தை செலுத்தாமையையிட்டு கைதுசெய்யப்பட்டிருந்தார். இந்நிலையிலேயே, குறித்த நபர் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சிறைக்காவர்களுக்கு தெரியாமல் தப்பிச் சென்றுள்ளார்.

தப்பிச்சென்ற நபரை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .