Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 பெப்ரவரி 04 , மு.ப. 08:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
நுவரெலியா மாவட்டம் நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எலிபொடை மேற்பிரிவு தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 3 சிறிய சிறுத்தைக் குட்டிகளை தோட்ட மக்கள் நோர்வூட் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். நேற்று 3ஆம் திகதி காலை 11.00 மணியளவில் மாட்டிற்கு புல்லறுக்கச் சென்றவர்கள் திடீரென அவ்விடத்திலிருந்து சிறுத்தையொன்று ஓடியதைப் பார்த்துள்ளனர்.
அதன்போது அவ்விடத்தில் தேடி பார்த்த போது அங்கு 3 சிறுத்தைக் குட்டிகள் காணப்பட்டதையடுத்து நாய்களால் குட்டிகளுக்கு ஆபத்து ஏற்படலாம் எனக்கருதி அவர்கள் நோர்வூட் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்தச் சிறுத்தைக் குட்டிகளை நல்லதண்ணி வனஇலாகா அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக நோர்வூட் பொலிஸ்; நிலையப் பொறுப்பதிகாரி சமன்குமார தெரிவித்தார்.
3 hours ago
9 hours ago
17 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
17 Aug 2025