Editorial / 2026 ஏப்ரல் 13 , பி.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட (Level-1) மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை நாளை (14) மாலை 4:00 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, பின்வரும் மாவட்டங்களில் உள்ள பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது:
குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள், நிலத்தில் வெடிப்புகள் ஏற்படுதல், மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்வடைதல் அல்லது திடீர் நீரூற்றுகள் தோன்றுதல் போன்ற மண்சரிவுக்கான ஆரம்பகட்ட அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அவதானத்துடன் செயற்படுமாறும் பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
34 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
50 minute ago