2024 மே 03, வெள்ளிக்கிழமை

500 போதை குளிசைகளுடன் இருவர் கைது

Janu   / 2024 ஏப்ரல் 07 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்ட விரோதமான முறையில்  போதை குளிசைகள் எடுத்துச்சென்ற குற்றச்சாட்டில்,  இருவர் சனிக்கிழமை (06) கைது செய்யப்பட்டதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர் . 

மொனராகலையில் இருந்து பிபிலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பட்டா ரக  வாகனமொன்றை ,  மாவட்ட செயலாளர் அலுவலகத்திற்கு அருகில் வைத்து சோதனையிட்ட  போது சட்டவிரோதமாக எடுத்துச்சென்ற  500 போதை குளிசைகள் மீட்கப்பட்டுள்ளது .

இது தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள்  கம்பளை , கம்பளவத்தை பிரதேசத்தை சேர்ந்த  26 மற்றும் 36 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் . 

மேலும் , சந்தேக நபர்களையும் , மீட்கப்பட்ட போதை குளிசைகள் மற்றும் பட்டா ரக வாகனத்தையும் மொனராகலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர் .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .