2025 மே 05, திங்கட்கிழமை

அக்குறணையில் 38 கொரோனா தொற்றாளர்கள்

Gavitha   / 2020 நவம்பர் 23 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

அக்குறணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை, 38ஆக அதிகரித்துள்ளது என, சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

சில தினங்களுக்கு முன்னர், அக்குறணை பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட 12 தொற்றாளர்களின் உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர், பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதன்போது, மேலும் 12 பேர், வைரஸ் தொற்று உள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டனர். அத்துடன், அவர்களுடன் நெருங்கியத் தொடர்பைப் பேணி வந்தவர்களிடம் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட போது, மற்யைவர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X