2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

அதிபருக்கு பாராட்டு

Kogilavani   / 2016 பெப்ரவரி 14 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ

குருவிட்ட சாஹிரா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வளர்ச்சிக்காக கடந்த 12 வருடங்களாக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட குருவிட்ட சாஹிரா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஏ.எம்.அக்ரம், இன்று (15) திங்கட்கிழமை தனது அதிபர் சேவையில் இருந்து ஒய்வுபெறுகின்றார்.

இதனையொட்டி, பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள், வர்த்தகர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து இவருக்கு மாபெரும் பாராட்டுவிழா ஒன்றை நடத்த உள்ளனர்.

பாராட்டு விழா, இன்று (15) திங்கட்;கிழமை காலை 9.00 மணிக்கு பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக அமைச்சர் ஜோன் செனவிரத்ன, சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் உட்பட பலர் கலந்துகொள்வுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .