2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

ஆல மரத்தின் கிளைகள் முறிந்து விழுந்ததால் ஆலயம் சேதம்

Kogilavani   / 2016 ஜூன் 01 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், ரஞ்சித் ராஜபக்ஷ

நோர்வூட், அயரபி தோட்டத்தில் ஆலமரத்தின் கிளைகள் முறிந்து விழுந்ததால்,  அத்தோட்டத்திலுள்ள மாரியம்மன் ஆலயம் சேதமாகியுள்ளதுடன் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.

ஆலயத்துக்கு அருகிலிருந்த சுமார் 100 வருடங்கள் பழமையான ஆலமரத்தின் கிளைகளே  இன்று(1) காலை முறிந்து விழுந்துள்ளன. இதனால் நியூட்டன் தோட்டத்துக்கான குறுக்கு வீதி பாதையும் தடைப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்நிலையில், ஆலய நிர்வாகத்தின் அனுமதியைப் பெற்று, ஆலமரத்தை முற்றாக வெட்டி அகற்றுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .