2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

ஆலயத்தில் திருட்டு: மூவருக்கு தடுப்புக் காவல்

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சுஜிதா, கு. புஸ்பராஜ் 

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டகொட மேற்பிரிவிலுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட மூவரை, மார்ச் மாதம் 1ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு நுவரெலியா நீதவான் நிதிமன்ற நீதவான் ஆர்.டி. சில்வா உத்தரவிட்டார். 

மேற்குறிப்பிட்ட ஆலயத்தில் கடந்த 15ஆம் திகதி, நகை மற்றும் உண்டியல் பணம் ஆகியன திருட்டுப் போயின. 

இதனைத் தொடர்ந்து சந்தேகநபர்கள் மூவரையும், கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) மாலை தலவாக்கலை பொலிஸார் கைதுசெய்திருந்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .