Princiya Dixci / 2016 ஜூன் 15 , மு.ப. 08:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பாலித ஆரியவங்ச,எம். செல்வராஜா
பதுளை, இராவணா எல்ல வனப்பகுதியில் இராவணன் குகைக்கு அருகில் இன்று புதன்கிழமை (15) அதிகாலை ஏற்பட்ட தீயினால், 15 ஏக்கர் வனப்பகுதி பெரும் சேதத்திற்குள்ளாகியுள்ளது.
எல்ல பொலிஸார் மற்றும் வன விலங்கு திணைக்கள அதிகாரிகள், பிரதேசவாசிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இவ்வனப்பகுதியில் வேட்டையாடடுவதற்காக வந்தவர்களே இவ்வாறு தீ வைத்துச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதாக தெரிவித்தனர். எனினும், தீ பரவியமைக்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.




9 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
11 Apr 2026
11 Apr 2026