2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

இருவரின் சடலங்கள் மீட்பு

Kogilavani   / 2016 ஜூலை 07 , மு.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கு.புஸ்பராஜ்

மலையகத்தின் இருவேறு பகுதிகளிலுள்ள நீர்நிலைகளிலிருந்து ரவிச்சந்திரன் சுரேந்திரன் (வயது 28),  பெருமாள் நாகராஜ் (வயது 39) ஆகியோரின் சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

தலவாக்கலை, மிட்டில்டன்  தோட்டத்தில் உள்ள வடிக்கானிலிருந்து ரவிச்சந்திரன் சுரேந்திரன் (வயது 28) என்ற இளைஞனின் சடலத்தை புதன்கிழமை மாலை மீட்டுள்ளதாக பொலிஸார் கூறினார்.

வடிகானில் சடலம் கிடப்பதைக் கண்டு பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலைத் தொடர்ந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைக்காக லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு பூண்டுலோயாவிலுள்ள ஆற்றிலிருந்து பெருமாள் நாகராஜ் (வயது 39) என்பவரின் சடலத்தை பூண்டுலோயா பொலிஸார் புதன்கிழமை(6) காலை மீட்டுள்ளனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .