2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

இறுதிக் கிரியை கூடம் திறப்பு

Kogilavani   / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கண்டி, மஹய்யாவை பொதுமயானத்தில் சடலங்களை நல்லடக்கம் செய்யும்போது மேற்கொள்ளப்படும் இறுதிக் கிரியைகளுக்கான கூடமொன்று 25 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கண்டி மாநகரசபையின் அங்கத்தவர்களது நிதி உதவியில் இக்கூடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இம்மயானத்தில் இந்துக்களின் சடலங்களை அடக்கம் செய்யும்போது, இறுதிக்கிரியைகளை செய்வதற்கான கட்டடமொன்று இல்லாதிருந்தது. கடந்த 150 வருடங்;களாக நிலவி வந்த இக்குறைபாடானது தற்போது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இக்கூடம் மக்களின் பாவனைக்காக அண்மையில் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .