2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

உலக முடிவில் மாயமான 12 பேர் திரும்பினர்

Kanagaraj   / 2016 செப்டெம்பர் 18 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிபொல பகுதியில் உள்ள உலகமுடிவை பார்வையிடுவதற்காக சென்றிருந்தபோது, காணாமல் போனதாக கூறப்படும், கொழும்பு- கொலன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் 12 பேரும், எவ்விதமான ஆபத்துகளுக்கும் இன்றி திரும்பிவிட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள், உலக முடிவை பார்வையிடுவதற்காக நேற்றுச் சனிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு அங்கு சென்றுள்ளனர்.

எனினும்,  வழி தவறியிருந்த அவர்கள் அன்றையதினம் மாலை 5.45க்கு, உலகமுடிவை பார்வையிடச்செல்லும் நுழைவாயிலுக்கு திரும்பிவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களுக்கு எவ்விதமான உயிராபத்துகளோ அல்லது சொத்து இழப்புகளோ ஏற்படவில்லை என்றும் நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .