2025 ஜூன் 30, திங்கட்கிழமை

ஓடைக்குள் தவறி விழ்ந்து சிறுவன் பலி

Sudharshini   / 2015 ஒக்டோபர் 17 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்

கம்பளை, அட்டபாகே துனுக்கே பகுதியில் நேற்று (16) இரவு ஓடையை கடக்க முயன்ற 8வயதுச் சிறுவன், ஓடைக்குள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

நேற்று (16) இரவு தந்தையுடன் வெளியில் சென்றிருந்த சிறுவன், மீண்டும் வீடு திரும்பிக்கொடிண்டிருந்த போது, தந்தை கூறியதை செவிமடுக்காது அருகிலிருந்த ஓடையை பாய்ந்து கடக்க முற்ப்பட்டுள்ளான். இதன்போதே, அதில் தவறி விழ்ந்துள்ளான்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் குறித்த ஓடையின் நீர் மட்டம் அதிகரித்துள்ள நிலையில், குறித்த சிறுவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளான்.

சிறுவன்,  ஓடையிலிருந்து 3 கிலோமீட்டருக்கு அப்பால் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளான்.

குறித்த சிறுவன், இகலகம வித்தியாலயத்தில் தரம் 3 இல் கல்வி பயின்று வந்துள்ளான்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X