2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

ஓய்வு பெற்ற சுகாதார சேவையாளர்கள் மீண்டும் சேவையில் இணைப்பு

Sudharshini   / 2016 மே 27 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

சப்ரகமுவ மாகாண சபையின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளில் சேவையிலிருந்து ஓய்வுபெற்ற 43 சுகாதார சேவையாளர்கள் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

சப்ரகமுவ மாகாண சபையின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளுக்கு  மருந்து விநியோகிப்பவர்கள் 80 பேரும், சுகாதார குடும்பநல உத்தியோகத்தர்கள் 209 பேருக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இந்த வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்காக ஓய்வுபெற்ற 43 சுகாதார சேவையாளர்கள் மீண்டும் புதன்கிழமை (25) சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

இவர்களுக்கான நியமன கடிதங்களை சப்ரகமுவ மாகாண முதலமைச்சரும் மாகாண சுகாதார அமைச்சருமான மஹிபால ஹேரத் வழங்கி வைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .