2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

குடியிருப்பின்மீது மரம் முறிந்து விழுந்ததில் 30 பேர் நிர்க்கதி

Kogilavani   / 2016 மே 19 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரவிந்திர விராஜ் அபயசிறி  

இரத்தொட்டை, பம்ரகலவத்தையில் லயின் குடியிருப்பின் மீது இன்று மாலை மரம் முறிந்து விழுந்ததில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இரத்தொத்தட்டை பிரதேச செயலாளர் ஜீ.பீ.விஜேபண்டார தெரிவித்தார்.

கடும் காற்று காரணமாக மரம் முறிந்து குடியிருப்பின் மீது விழுந்துள்ளதாக அவர் கூறினார். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள், இடைதங்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கான நிவாரண பொருட்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை பிரதேச செயலகம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .