2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

கித்துள் மரம் விழுந்ததில் சிறுவன் பலி

Kogilavani   / 2016 மார்ச் 27 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 மொஹொமட் ஆஸிக்

கித்துள் மரம் விழுந்ததில் 12 வயது சிறுவன், பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம்  அங்குமபுறை, கலஹின்ளை பிரதேசத்தில்  சனிக்கிழமை(26) இடம்பெற்றதுள்ளது.

கல்ஹின்னை அல்மனார் மத்திய கல்லூரியில் தரம்-6 இல் கல்வி பயின்றுவந்த    எம்.அஹ்மட் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.

வயலில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனின் மீது, வயலிலிருந்த உறுதியற்ற கித்துள் மரம் உடைந்து விழுந்ததாகவும்  சிறுவன் ஸ்தலத்திலே பலியானதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் அங்கும்புரை பொலிஸார் மேவதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .