2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

குப்பைகளை கொட்டுவதை தவிர்க்கவும்

Sudharshini   / 2016 ஏப்ரல் 04 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரவிந்திர விராஜ் அபயசிறி

மாத்தாளை, அலுவிஹார  பிரதேசத்தில்  வீதியோரத்தில் குப்பைகளை கொட்டுவதைத் தவிர்க்குமாறு  பொதுமக்கள் கோருகின்றனர்.

கடந்த பல மாதங்களாக  குறித்த இடத்தில்  குப்பைகள் கொட்டப்படுவதனால் தாம் சுகாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் நகர சபைக்கும் பொலிஸாருக்கும் பலமுறை அறிவிக்கப்பட்டப்போதிலும்  இதுவரை எவ்விதமான நடவடிக்கைகளும்  முன்னெடுக்கவில்லையென மக்கள் தெரிவித்தனர்.

எனவே, இது தொடர்பாக உரிய அதிகாரிகள்  கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .