2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

கூரைகளில் விழுந்தது டிப்பர்: ஏழுபேர் தப்பினர்

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 15 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

மாத்தளையை நோக்கி பயணித்த டிப்பர் வாகனமொன்று, கண்டி- மாத்தளை வீதியில் பலகடுவ பிரதேசத்தில் பள்ளத்திலிருந்த இரு வீடுகளின் கூரைகளின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது

இதனால், அவ்விரு வீடுகளின் கூரைகள் மற்றும் சுவர்கள் சேதமடைந்துள்ளதாக அலவத்துகொடை பொலிஸார் கூறினர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தினால் டிப்பர் வாகனத்தின் சாரதி மயிரிழையில் உயிர்தப்பியதாக பொலிஸார் மேலும் கூறினர்.

இதேவேளை, மேற்படி இரு வீடுகளிலும் ஏழுபேர் இருந்ததாகவும் இவர்கள் உயிர் ஆபத்தின்றி தப்பிக்கொண்டதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .