2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

குறிஞ்சி மொழி சங்கத்தின் வருடாந்த பரிசளிப்பு

Kogilavani   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கு.புஷ்பராஜா

அக்கரபத்தனை மன்றாசி தோட்டத்தில் இயங்கும் குறிஞ்சி மொழி சங்கத்தின் வருடாந்த பரிசளிப்பு, சங்கத்தின் தலைவர் டி.சரத்குமார் தலைமையில் நாளை மறுதினம் ஞாயிற்றுகிழமை காலை 10 மணிக்கு பிரிடோ முன்பள்ளி முற்றத்தில் நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் அதிதிகளாக தேசிய கலந்துரையாடல் மற்றும் மொழிகள் அமைச்சின் அதிகாரிகளான ஆனந்த திசாநாயக்க, லகுரு பண்டார மற்றும் கிராம அதிகாரி குழந்தைவேல், நு/கிளன்லைன் பாடசாலை அதிபர் ஏ.சுந்தரம், நியு போட்மோர் தோட்ட அதிகாரி ஜெயலத் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆனந்தசிறி மற்றும் பலர் கலந்துகொள்ள உள்ளனர்.

சங்கத்தால் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு இதன்போது பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .