2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கத்திக்குத்தாக மாறிய வாக்குவாதம்: ஒருவர் பலி

Gavitha   / 2015 டிசெம்பர் 07 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொதுச் சந்தை வளாகத்தில், விற்பனையாளரொருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.

சூடான வாக்குவாதமொன்று ஏற்பட்டதன் காரணத்தினாலேயே இந்தக் கத்திக்குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கண்டி, லெவெல்ல பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .