2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

கத்திக்குத்தில் மைத்துனனுக்குக் காயம்

Gavitha   / 2020 நவம்பர் 24 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

குடும்பப் பிரச்சினையொன்றின் காரணமாக, இரண்டு மைத்துனர்களுக்கு இடையில் இடம்பெற்ற கத்திக்குதது மோதலில் பலத்த காயமடைந்த ஒருவர், மஹியங்கனை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

இச்சம்பவம், மஹியங்கனை பகுதியின் உல்ஹிட்டிய எனும் இடத்தில், இன்று (24) இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபர் மேற்கொண்ட முறைப்பாட்டையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய மைத்துநர், கிராந்துரு கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சகோதரியின் கணவருடன் ஏற்பட்ட குடும்பப் பிரச்சினையே கத்திக்குத்தாக மாறிதால், சகோதரின் கணவனர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரின் நிலை, கவலைக்கிடமாக இருப்பதாக  தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .