2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

களுபான விபத்தில் 14 பேர் காயமடைந்தனர்

R.Maheshwary   / 2021 ஒக்டோபர் 07 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா
இ.போ.ச. பஸ்ஸொன்றும், ஓட்டோவொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியதில் 14 பேர் காயமடைந்து ஹல்துமுல்ல பிரதேச வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
ஹல்துமுல்ல - களுபான என்ற இடத்தில் இன்று(7)  இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
 
பலாங்கொடையிலிருந்து பண்டாரவளையை நோக்கி வந்து கொண்டிருந்த இ.போ.ச. பஸ், எதிர்த்திசையில் சென்ற ஓட்டோவுடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் ஓட்டோவில் பயணித்த மூவருடன் பஸ்ஸில் பயணித்த 11 பேரும் காயங்களுக்குள்ளாகினர்.
 
ஓட்டோவில் பயணித்த மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக  வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
 
ஹல்துமுல்ல பொலிசார் இவ் விபத்து குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .