Sudharshini / 2015 ஒக்டோபர் 31 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கு.புஸ்பராஜ்
நுவரெலியா, கொத்மலை பிரதேச செயலகத்துக்குட்பட்ட கொத்மலை, ரம்பொடை வெதமுல்ல கயிறுகட்டி தோட்ட மக்கள் வெள்ளிக்கிழமை (30) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மண்சரிவு நிகழ்ந்து ஒரு மாதமும் 10 நாட்களும் கடந்துள்ள நிலையில் தொடர்ந்தும் அச்சத்துடன் வாழும் தமக்கு விரைவில் வீடுகளை அமைத்துத் தருமாறு கோரியே இக்கவனயீர்ப்பு போரட்டத்தை மக்கள் முன்னெடுத்தனர்.
கொத்மலை, ரம்பொடை வெதமுல்ல கயிறுகட்டி தோட்டத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் 25ஆம் திகதி இடம்பெற்ற பாரிய மண்சரிவில் சிறுவர்கள், பெண்கள் உட்பட எழுவர் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


2 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
18 Apr 2026