2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

காற்றுடன் கூடிய மழையினால் 20 வீடுகள் பாதிப்பு

Editorial   / 2018 மார்ச் 29 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுஜித் சுரேன்

தலவாக்கலையில் பெய்த, கடும் காற்றுடன் கூடிய அடை மழையினால், சுமார் 20 வீடுகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. நேற்று (28), பி.ப.3 மணியளவில், பெய்த கடும்மழையினாலேயே, தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, தலவாக்கலை தோட்டத்தின், நானு ஓயா பிரிவிலுள்ள 9 வீடுகளினதும், வட்டகொட - பொகஸ்போர்ட்  தோட்டத்தின் 10 வீடுகளினதும் கூரைத் தகடுகளே இவ்வாறு பாதிப்புக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நானு ஓயா பிரிவிலுள்ள வீடொன்றின் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததால், குறித்த  வீடு சேதமாகியுள்ளது. அத்துடன், ஓஸ்போர்ட் பிரிலும் மரமும் மின் கம்பங்களும் முறிந்து விழுந்தமையினால் மேலும் சில வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவங்களினால், இவ் இரு பிரதேசங்களிலும், சுமார் 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, இப்பகுதிகளுக்கான மின் விநியோகமும், தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை மின்சார சபையின், தலவாக்கலை கிளை காரியாலய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .