2024 மார்ச் 28, வியாழக்கிழமை

காலவரையறையின்றி பல பகுதிகள் முடக்கம்!

Freelancer   / 2021 ஜூன் 12 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

பொகவந்தலாவை - 319 F கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட ஆரியபுர, சிரியுர  பொகவந்தலாவை மேல்பிரிவு ஆகிய பகுதிகள்  காலவரையறையின்றி முடக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் நேற்று மாலை 28 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்தே இன்று அதிகாலை முதல் குறித்த பிரதேசம் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

118 குடும்பங்களைச் சேர்ந்த 375 பேர் வசிக்கும் குறித்த பிரதேசத்திலிருந்து யாரும் வெளியில் செல்லவும், வெளியார் யாரும் உள்ளே வரவும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார். - R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X